மகனின் வேட்டையால் தந்தை பலி!

கேகாலை தெடிகம பிரதேசத்தில் மகன் வன விலங்கை வேட்டையாடும் நோக்கில் பிரயோகித்த துப்பாக்கி சூட்டில் தந்தை உயிரிழந்துள்ள துயரம் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 47 வயதுடைய தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார். குறித்த பிரதேசத்தில் உள்ள மலைப்பகுதிக்கு தந்தையும் மகனும் வன விலங்குகளை வேட்டையாட சென்றுள்ளனர்.

இதன்போது மகனால் வன விலங்குகளை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தை அடுத்து உயிரிழந்தவரது 17 வயது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெடிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.