பகிடிவதைகள் தொடர்பில் இராஜங்க அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

நாட்டில் பகிடிவதைகள் தொடர்பான குற்றங்கள் உறுதிசெய்யப்பட்டால், சந்தேகநபர் ஒருவருக்கு சுமார் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில், நேற்றைய தினம் (29-01-2024) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இவ் விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.