அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்

இந்திய அணியின் வீரர் மயங்க் அகர்வால், திடீரென உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மயங்க் அகர்வால், ரஞ்சி கிண்ணத்தில் கர்நாடகா அணியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ரஞ்சி போட்டியில் விளையாட்டிவிட்டு அகர்தலாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, விமான நிலையத்தில் விமானத்தில் ஏறியவுடன், அவருக்கு வாய் மற்றும் தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணை

இதனை தொடர்ந்து விமானத்தில் இருந்த அதிகாரிகள், மயங்க் அகர்வா உடனடியாக அகர்தலா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தற்போது எந்தவித ஆபத்தும் இல்லை என்றும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் மயங்கை சிகிச்சை அளித்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.