வவுனியா சிறைக் கைதிகளுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு!

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (04.02.2024) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பொது மன்னிப்பின் கீழ் நாடு முழுவதும் 600 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

நாட்டில் சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.

இதன்படி வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 12 கைதிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை சிறைச்சாலை அதிகாரிகள் கைலாகு கொடுத்து வீடுகளுக்கு வழியனுப்பி வைத்தனர்.