யாழில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயது யுவதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

யாழ்ப்பாணத்தில் உள்ள நடனக்குழுவொன்றில் அங்கம் வகிக்கும் 22 வயதான யுவதியொருவர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட யுவதிக்கு கு நடத்தப்பட்ட பரிசோதனையில், குறித்த யுவதி ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்துவது உறுதியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட யுவதி, நடனக்குழுவின் அங்கத்தவர்களிடமிருந்து போதைப்பொருளை பெறுவதாக குறிப்பிட்டுள்ளார். குறித்த நடன குழு வீடுகள், மற்றும் பொது இடங்களில் நடக்கும் நிகழ்வுகளில் நடனமாடுபவர்கள் எனவும் கூறப்படும் நிலையில் , யுவதி தற்போது கண்காணிப்பின் கீழ் உள்ளதாகவும் தெரிவிகப்படுகின்றது.