சட்டவிரோத மின் இணைப்பால் பறிபோன உயிர்!

  புப்புரஸ்ஸ – லெவலன்வத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சட்டவிரோத மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் புப்புரஸ்ஸ – லெவலன்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபராவார்.

குறித்த வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அருகில் உள்ள வீட்டில் இருந்து மின்சாரம் பெற்றுக்கொள்ள முயன்ற போதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புப்புரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.