யாழ் தெல்லிப்பளையில் ஆளில்லா கமெராவை பறக்கவிட்ட நபர் கைது!

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை பகுதியில் ஆளில்லா கமெராவை பறக்கவிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் தெலிப்பளை துர்காபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர், ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி ஆளில்லா கமெராவை பறக்கவிட்டபோதே தெலிப்பளை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.