நாக்கை வைத்து உடல் ஆரோக்கியத்தை கண்டு பிடிப்பது எப்படி?

நமது உடல் ஆரோக்கியத்தை நாக்கை பரிசோதித்தாலே மருத்துவர்கள் தெரிந்து கொள்வார்கள். அது எவ்வாறு என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் நாக்கு

பொதுவாக மருத்துவமனைக்கு சென்றால் மருத்துவர்கள் முதலில் நாக்கை தான் பரிசோதனை செய்வார்கள். காரணம் நாக்கை பரிசோதிக்கும் போது நமது ஆரோக்கியத்தின் நிலையை சரியாக தெரிந்து கொள்ள முடியும்.

தினமும் நாக்கை சுத்தம் செய்யாமல் இருந்தால், வாய் துர்நாற்றம், பூஞ்சை தொற்று மற்றும் பாக்டீரியா பாதிப்பு அதிகரிக்கும்.

நாக்கில் விரிசல் காணப்பட்டால் சிறுநீரக பிரச்சினைகள் அல்லது நீரிழிவு நோயைக் குறிக்கிறது.

அதே போன்று நாக்கு கறுப்பாக மாறினாலோ அல்லது வெள்ளைக் கொப்புளங்கள் இருந்தாலோ செரிமானப் பிரச்சனை ஏற்படலாம் என்று அர்த்தம்.

நீங்கள் அதிக மன அழுத்தத்தில் காணப்பட்டாலும், உங்களது நாக்கில் புண்கள் ஏற்படலாம். நாக்கு மிகவும் மென்மையாக இருந்தால், அது இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.  

நாக்கை சுத்தப்படுத்தி அல்லது மஞ்சள் தூளில் எலுமிச்சை சாறு கலந்து இந்த பேஸ்ட்டை நாக்கில் தடவி 10 நிமிடம் விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.