பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்தை வெளியிட்ட இயக்குனர்!

ஆர்.வி.உதயகுமார்

90 களில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் ஆர்.வி.உதயகுமார்.இவர் சின்னக்கவுண்டர், எஜமான், சிங்கார வேலன், பொன்னுமணி உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

சர்ச்சை

இந்நிலையில் “என் சுவாசமே” என்ற படத்தின் ஆடியோ லாஞ்சில் கலந்துகொண்டு பேசிய ஆர்.வி.உதயகுமார் பெண்களின் உடை குறித்து சில கருத்துக்களை பேசியிருக்கிறார்.

அதில் அவர், “நான் இன்னும் இந்த திரைப்படத்தை பார்க்கவில்லை. இனி மேல் பார்த்துவிட்டு தான் சொல்வேன். மேடையில் ஒருவர் சொன்னார். பெண்ணியம் பேசுபவர்களே பெண்களை ஆபாசமாக காட்டுகிறார்கள் என்று. பெண்கள் ஏன் இப்படி தங்களை தாங்களே அவுத்துபோட்டு காட்டுகின்றனர். இதை பற்றி அவர்களிடம் கேட்க வேண்டும் “.

“சினிமாவை கூட காப்பாற்றிவிடலாம் ஆனால் சோசியல் மீடியாவில் பெண்களை அவர்களே முழு உடம்பும் தெரியும் படி புகைப்படம், வீடியோ எடுத்து போடுகிறார்கள். அதை பார்ப்பவர்களை எப்படி நாம் காப்பாற்ற முடியும்?” என்று ஆர்.வி.உதயகுமார் பேசியுள்ளார்.

தற்போது ஆர்.வி.உதயகுமார் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.