தேரர் கொலையில் பெண் ஒருவர் கைது!

 மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம விகாரையின் தேரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரலகங்வில – வெரகல பிரதேசத்தில் வைத்து நேற்று (21) காலை குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு உதவியமை மற்றும் உண்மையை மறைத்த குற்றச்சாட்டின் கீழ் யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பெண், வெரகல – தேவகல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.