கொக்குதொடுவாய் மனித புதைகுழி வழக்கு ஒத்தி வைப்பு!

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இன்றையதினம் (22) கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கானது வருகின்ற மார்ச் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் வழக்கின் அகழ்வாய்வு நடவடிக்கையில் ஈடுபட்ட தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவினால் இடைக்கால அறிக்கையொன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அதிபர்

குறித்த அறிக்கையில், அகழ்வு பணியினை திட்டமிட்டபடி நடாத்த நிதி கிடைக்கபெறவில்லையெனவும் இது தொடர்பாக அரசாங்க அதிபர் நீதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த வழக்கானது வருகின்ற மார்ச் மாதம் 4 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம் பெற்ற இந்த வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம், கொக்கிளாய் காவல்துறை பொறுப்பதிகாரி, கொக்கிளாய் பகுதி கிராம அலுவலர், சட்டத்தரணிகளான வி.கே நிறஞ்சன் மற்றும் கணேஸ்வரன் ஆமலும் காணாமல் போனோர் அலுவலகம் சார்பாக சட்டத்தரணி துஷ்யந்தினி ஆகியோர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணையானது முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான குறித்த வழக்கே இன்றையதினம் (22) முன்னெடுக்கப்படவுள்ளது.

மனித புதைகுழி

குறித்த மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வானது 06.09.2023 அன்று ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டு இரண்டாம் கட்ட அகழ்வுபணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை

இதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழ்வுபணிகள் வரும் மார்ச் மாதம் ஆரம்பிப்பது என தெரிவிக்கப்பட்டிருந்தது குறித்த விடயம் தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்கள் தனது அறிக்கையை நீதிமன்றுக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணை இன்றையதினம்(22) வழக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.