நாடு முழுவதும் 40,000க்கும் மேற்பட்டபோலி மருத்துவர்கள்!

 நாடு முழுவதிலும் 40,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் போலியாக செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகவலை GMOA பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறான வைத்தியர்கள் ஆபத்தான நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

மக்களை ஏமாற்றும்  மருத்துவர்கள்

சில சந்தர்ப்பங்களில் மருத்துவ உதவியாளர்கள், தாதியர்கள் அல்லது துணை மருத்துவ சேவைகளில் அங்கம் வகிக்கும் ஒருவர், மருத்துவர்களாகக் காட்டிக் கொண்டு அவர்களின் கிராமத்திலோ அல்லது சொந்த ஊரிலோ நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது கண்டறியப்பட்டதாகவும் வைத்தியர் தெரிவித்தார்.

இலங்கையின் சுகாதார அமைப்பிற்குள், ஒரு நோயாளிக்கு மருந்துகளை பரிந்துரைக்கும் அறிவும், பொறுப்பும் மற்றும் அதிகாரமும் ஒரு மருத்துவருக்கு மட்டுமே உண்டு. வேறு எந்த குழுவிற்கும் அவ்வாறு செய்ய அறிவு அல்லது அதிகாரம் இல்லை என்றும்,

ஒரு நோயாளி மருந்து பெற அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் ஆய்வக சோதனைக்கு மட்டுமே உட்படுத்த முடியும் என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.