நாட்டின் சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!

   நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை அடுத்த மாத நடுப்பகுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கடும் வெப்பம் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு , குருணாகலில் நேற்று (26) அதிகூடிய வெப்பநிலையாக 35.5 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளது.

வெப்ப காலநிலையால் நாட்டின் சில பகுதிகளில் உள்ள நீரோடைகள் மற்றும் கிணறுகளின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.