யாழ் சாவகச்சேரி பகுதியில் மண்ணில் புதைத்து வைத்த பாலைக் ககுற்றிகள் மீட்பு!

யாழ். கைதடி பகுதியில் மண்ணினுள் மறைத்து வைத்து 146 பாலை மரக் குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது மரக்குற்றிகளை எடுத்துச் செல்ல பயன்படுத்திய டிப்பர் ரக வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

முல்லைத்தீவு – விசுவமடு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்ட வேளை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் பொ.ஜெயரூபன் தலைமையிலான குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டடுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.