யாழ்ப்பாணம் உட்பட நான்கு மாவட்டங்களில் காற்றின் தரம் குறைவு!

யாழ்ப்பாணம் உட்பட நான்கு மாவட்டங்களின் காற்று மாசுபாடு காரணமாக நிலைமை மோசமாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக கொழும்பு நகரின் காற்று மாசுபாடு நிலைமை படு மோசமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் காற்றின் தர சுட்டெண்

கொழும்பு நகரில் காற்றின் தர சுட்டெண் 158 (பி.எம்.2.5) எனவும், சுட்டெண் மேலும் மோசமடைந்தால், கடுமையான அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பைத் தவிர அக்குறணை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் வளி மாசு நிலைமை மோசமாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.