இந்தோனேசிய வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி!

இந்தோனேசியாவில் சுமத்திராத தீவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் தொடர் மழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும், வீதிகளில் மழைநீர் நிரம்பியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, 8,000க்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.