யாழில் கனடாவால் பறிபோன மாற்றுத்திறனாளி உயிர்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் மாற்றுத் திறனாளி ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தெல்லிப்பழையில் நேற்றையதினம் (11-03-2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் அக்குடுவன, கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த 32 வயதான தனபாலசுப்பிரமணியம் சுஜீவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடரில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபரின் சகோதரி ஒருவர் கனடாவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இறந்த நபருக்கும், அவரது தாயாருக்கும் கனடாவுக்கான சுற்றுலா விசா கிடைத்துள்ளது.

ஆனால் குறித்த நபருக்கு கனடா செல்வதில் விருப்பம் இருக்கவில்லை. இந்நிலையில் அவர் தனது சக்கர நாற்காலியை கிணற்றுக்கு அருகே நிறுத்திவிட்டு கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.

இந்நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.