யாழில் இளம் குடும்பஸ்தர் கொலை கிளிநொச்சியில் நால்வர் கைது!

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் படுகொலை சம்பவத்தில் கிளிநொச்சியில் பதுங்கியிருந்த நான்கு சந்தேகநபர்கள் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய தவச்செல்வம் பவிதரன் எனும் இளைஞன் மனைவியுடன் சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை வன்முறை கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டு தக்குதலுக்குள்ள நிலையில் உயிரிழந்தார்.

கிளிநொச்சியில் பதுங்கியிருந்த சந்தேக நபர்கள்
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் குழுவினர் , சந்தேக நபர்கள் கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதை அடுத்து , அங்கு விரைந்த பொலிஸ் குழுவினர் நான்கு சந்தேக நபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிளை கைப்பற்றி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபர்கள் வட்டுக்கோட்டை மற்றும் அராலி பகுதிகளை சேர்ந்த 37 , 32 , 25 மற்றும் 22 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த வருடம் ஆலயம் மொன்றில் இடம்பெற்ற சம்பவத்திற்கு பழி தீர்க்கும் வகையிலையே இக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.