வவுனியாவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும், பொலிஸாரின் அராஜகத்தை கண்டித்தும் வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.

குறித்த ஆர்பாட்டமானது வவுனியா – பழைய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் இருந்து பாரிய வாகன பேரணியொன்று வவுனியாவை வந்தடைந்துள்ளது.

இதற்கமைய ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ள இடத்தில் பாதுகாப்பு படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.