யாழ் போதனா வைத்தியசாலையில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

  யாழ் போதனா வைத்தியசாலைக்கு கஞ்சா கலந்த பீடியுடன் சென்ற ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவரை பார்வையிட வந்த நிலையில் காவலாளிகள் அவரை பரிசோதித்த போது கஞ்சா கலந்த பீடி வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.