பிரபல சிங்கள நடிகை மற்றும் அவரது கணவர் கைது!

இலங்கையின் பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரும் சிஐடியினரால் இன்றையதினம் (04-04-2024) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரியாவுக்கு அனுப்புவதாக கூறி 30 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் நடிகை தமிதாவும், அவரது கணவரும் இன்று கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இதனையடுத்து, நீதிமன்றத்தில் அவர்களால் முன்வைக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, அவர்களைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.