தந்தையின் கத்திக் குத்திற்கு இலக்கான இரு பிள்ளைகள்!

தந்தையின் கத்திக்குத்துக்கு இலக்காகிக் காயமடைந்த இரு பிள்ளைகள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹிங்குராங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

உதானகம பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியும் 18 வயதுடைய இளைஞருமே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

மேலதிக விசாரணை
சந்தேக நபரின் மனைவி வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்று சென்றுள்ள நிலையில் பிள்ளைகள் இருவரும் தந்தையின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 3 ஆம் திகதி இரவு சந்தேக நபரான தந்தை, தனது மகளின் நகையை கேட்டுள்ள நிலையில், இது தொடர்பில் தந்தைக்கும் மகளுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதில் தந்தை, தனது இரு பிள்ளைகளையும் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இரு பிள்ளைகளில் மகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபரான தந்தை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.