சமன் ரத்நாயக்கவின் பிணை நிராகரிப்பு

தடுப்பூசி மோசடி தொடர்பான வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவின் பிணை கோரிக்கை இன்று (10) நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிணை கோரிக்கையை நிராகரித்த மாளிகாகந்த நீதவான் திருமதி லோச்சனி அபேவிக்ரம, சந்தேக நபரை விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெரிவித்தார்.