பண்டிகைகால தள்ளுபடிகள் குறித்து எச்சரிகை!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் காணப்படும் புத்தாண்டு தள்ளுபடிகள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது .

இந்நாட்களில் ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை கொள்வனவு செய்வதில் நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அதிகாரசபை விசேட சோதனை

இந்நிலையில் தள்ளுபடிகள் மூலம் பொருட்களை கொள்வனவு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென நுகர்வோர் அதிகாரசபையின் விசேட சோதனை மற்றும் விசாரணைகளின் பணிப்பாளர் சஞ்சய் வீரசிங்க தெரிவித்தார்.

பண்டிகைக் கால தள்ளுபடி பொருட்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், விலையில் உள்ள வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு, தள்ளுபடி செய்யப்பட்ட பொருட்களின் தரம் குறித்தும் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் எந்தவொரு பொருளுக்கும் பிரச்சினை ஏற்பட்டால், ஆதாரங்களுடன் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு செய்ய வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.