யாழ் கோர விபத்தில் தென்மராட்சிக் கல்வி வலய அதிகாரி பலி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிளில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேக கட்டுப்பாடு
குறித்த விபத்தில் தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரி 56 வயதுடையவரே இன்றைய தினம் (2024.04.12) வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.

பாடசாலை ஒன்றில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக, நேற்றைய தினம் வியாழக்கிழமை கோப்பாய் – கைதடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை எதிரே வந்த டிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து இவர் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்தவரை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.