40 வயது நபருடன் குடும்பம் நடாத்திய 17 வயது சிறுமி!

40 வயது நபருடன் ஏற்பட்ட காதலால் , 17 வயதுடைய சிறுமி மீது துப்பாக்கி சூட்டுச் சம்பவம் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொலன்னறுவை – மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரித்தலை பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுமி , பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரிந்து சென்ற சிறுமி மீது துப்பாக்கிச்சூடு
அங்கிருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் , சிறுமியின் நிலை மோசமடைந்ததையடுத்து மேலதிக சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த சிறுமி அப்பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபருடன் சுமார் இரண்டு வருடங்களாக காதல் தொடர்பில் இருந்து வந்ததுடன், அவருடன் சில காலம் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் 40 வயது நபரின் தொல்லை தாங்க முடியாமல் சில வாரங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். எனினும் தன்னுடன் வருமாறு அந்த நபர் பல சந்தர்ப்பங்களில் மிரட்டியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, நேற்றிரவு குறித்த சிறுமியும் அவரது தாயாரும் அருகில் உள்ள உறவினர் வீட்டில் வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட நிலையில், சந்தேக நபர் சிறுமியை சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில் சிறுமியின் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சந்தேக நபரை கைது செய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.