முன்னாள் அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் மரணத்திற்க்கான காரணம் வெளியானது!

முன்னாள் அமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று (16) பிற்பகல் மரணமடைந்திருப்பதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.

அவர் தனது தனியார் தோட்டத்தில் வேலை ஒன்றில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு தற்போது வயது 64. அவரது சடலம் களுத்துறை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாலித தெவரப்பெருமவின் மூத்த சகோதரரின் மகன் அருண் தெவரப்பெரும சம்பவம் தொடர்பில் பின்வருமாறு விளக்கமளித்தார்.

“பாலித தெவரப்பெருமவின் தனியார் தோட்டத்தில் உரமிடும் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த தோட்டத்தில் மின்விளக்குகளுக்காக பல இடங்களில் மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது.

தெரியாமல் தரையில் கிடந்த மின் வடத்தை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். இதனை அவதானித்த தொழிலாளர்கள் உடனே அவரை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.

அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.