தாய் மற்றும் சகோதரன் மீது கோடாலியால் தாக்குதல்

மஸ்கெலியாவில் கோடரியால் தாய் மற்றும் சகோதரனை தாக்கியதாக கூறப்படும் இளைய சகோதரன் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் 72 வயது உடைய தாய் மற்றும் 44 வயது உடைய சகோதரன் படுகாயமடைந்த நிலையில் கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொலிஸ் அவசர பிரிவுக்கு அழைப்பு
இச் சம்பவம் புதன்கிழமை (17) மாலை 4 மணிக்கு இடம் பெற்றுள்ளது என தெரிவித்த மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ,

தாக்குதல் சம்பவம் தொடர்பில் 119 பொலிஸ் அவசர அழைப்புக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு அதிகாரி மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இதன்போது சந்தேக நபரர் கைது கைது செய்யப்பட்துடன், தாக்குதலுக்குள்ளான இருவரை 1990 அம்புலன்ஸ் ஊடாக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (19) ஆஜர்படுத்தபட்ட போது எதிர் வரும் 24 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

மேலும் இக்கால கட்டத்தில் சந்தேக நபரை மன நோயாளர் வைத்திய அதிகாரி முன்நிலைபடுத்தி வைத்திய அறிக்கை பெறுமாறும் நீதவான் பணிப்புரை வழங்கியுள்ளார்.