அமெரிக்காவில் மீண்டும் உயிரை பறித்த ப்ளூ வேல் சவால்

அமெரிக்காவில்(United States of America) ப்ளூ வேல் (Blue Whale) சவாலை எதிர்கொண்ட இந்திய மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் (Massachusetts) பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் 20 வயதுடைய இந்திய(India) இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை ஆட்டம்
குறித்த இளைஞர், தற்கொலை ஆட்டம் எனப்படும் ப்ளூ வேல் (Blue Whale) சவாலை எதிர்கொண்டு, தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

ரஷ்யாவில்(Russia) இருந்து உருவான இந்த ப்ளூ வேல் (Blue Whale)சவால், மிக மோசமான கொடூரமான கட்டங்களை கொண்டதாகும். 50 நாட்கள் முன்னெடுக்கப்படும் இந்த சவாலானது, இறுதியில் தற்கொலையில் முடிக்கப்படுகிறது.

முதல் நாள், நள்ளிரவில் கண் விழிக்க சொல்வதும் அல்லது அவர்கள் பரிந்துரைக்கும் மிக மோசமான திரைப்படம் ஒன்றை அவர்கள் குறிப்பிடும் நேரத்தில் பார்க்க செய்வதும் சவாலாக அளிக்கப்படுகிறது.

அதன் பின்னர் மிக ஆபத்தான அல்லது மிகவும் கொடூரமான கட்டங்களை கொண்டுள்ளது இந்த ப்ளூ வேல் (Blue Whale)சவால். இதன் இறுதி கட்டத்தில், அதுவரை மூளைச்சலவை செய்யப்பட்ட நபரை தற்கொலைக்கு தூண்டுவதே கடைசி சவாலாக பார்க்கப்படுகிறது.

இது மட்டுமின்றி, இந்த சவால்களை எதிர்கொள்ளும் நபரை மிரட்டி, அச்சமடைய செய்து அல்லது உளவியல் ரீதியாக பணியவைத்து ஒவ்வொரு சவாலையும் மேற்கொள்ள வைக்கின்றனர்.

பொதுவாகவே நீலத் திமிங்கிலங்கள் தங்கள் எல்லைகளை சுயமாகவே மீறிச் சென்று, இறுதியில் சாவை எதிர்கொள்ளும் குணம் கொண்டவை. இதன் அடிப்படையிலேயே இந்த கொடூர சவால்களுக்கும் ப்ளூ வேல் (Blue Whale) என பெயரிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

2019 ஆம் ஆண்டில் முதல் முறையாக நூற்றுக்கணக்கான தற்கொலைக்கு பின்னணியில் இந்த ப்ளூ வேல் (Blue Whale) சவால் உறுதி செய்யப்பட்டது. ரஷ்யாவில் தொடங்கி உக்ரைன், அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இது வியாபித்தது.

கடந்த 2015 நவம்பர் 22ஆம் திகதி பலென்கோவா Palenkova என்ற ரஷ்ய இளம்பெண் இணையத்தில் தமது புகைப்படம் ஒன்றை பதிவு செய்ததுடன் மறு நாள் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது. இவரே ப்ளூ வேல் (Blue Whale)சவாலுக்கு முதல் பலி என்பது குறிப்பிடத்தக்கது.