தமிழர் பகுதியில் சூடு பிடித்துள்ள வியாபாரம்!

மன்னார் பகுதியில் தர்பூசணி மற்றும் நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இலங்கையில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

வெப்பத்தின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மன்னார் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிப்பதற்கு தர்பூசணி மற்றும் நுங்கு கொள்வனவுகளில் பொதுமக்கள் அதிகம் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளது.

உள்ளூர் சந்தைகளில் தர்பூசணிகளின் விலை சடுதியாக குறைந்துள்ள நிலையில் மக்கள் அதிகளவான தர்பூசணிகளை கொள்வனவு செய்து வருகின்றனர்.

இதேவேளை, நுங்குபோன்ற இயற்கையான பானங்களையும் பருகி வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

மன்னார் நகர் பகுதியில் பல இடங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளால் தர்பூசணி விற்பனை இடம்பெற்று வருகின்றமை அவதானிக்க கூடியதாக உள்ளது.