பேருந்து கட்டணம் தொடர்பான இறுதி தீர்மானம் இன்று!

எரிபொருள் விலை குறைப்புடன் பேருந்து கட்டணம் குறைக்கப்படுமா? இல்லை? என்பது தொடர்பில் இன்று (02) அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதுடன், இதன்போது டீசலின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டது.

ஆனால், கடந்த இரண்டு முறை எரிபொருள் விலையேற்றத்திலும் பேருந்து கட்டண திருத்தம் செய்யப்படாததால், வரும் ஜூலை மாதமே கட்டண திருத்தம் செய்யப்பட வேண்டும் என பேருந்து சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

இதன்படி, எரிபொருள் விலை குறைவினால் பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என அந்த சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படுமா என்பது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கமவிடம் “அத தெரண” வினவிய போது, அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து அதன் பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.