புதிய சீரியலில் என்டரி கொடுக்கும் கண்ணான கண்ணே சீரியல் கதாநாயகி நிமேஷிகா

கண்ணான கண்ணே நிமேஷிகா
சன் தொலைக்காட்சியில் மூன்று வருடங்களாக ஒளிபரப்பான சீரியல் கண்ணான கண்ணே. இந்த சீரியல் மூலம் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன் என்பவர் கதாநாயகியாக அறிமுகமானார்.

மக்கள் மத்தியில் வெற்றிகரமான சீரியலாக இருந்த கண்ணான கண்ணே 722வது எபிசோடில் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலுக்கு பின் நடிகை நிமேஷிகா மீண்டும் தமிழில் எந்த ஒரு சீரியலிலும் நடிக்கவில்லை.

புதிய சீரியலில் என்டரி

இந்த நிலையில், விரைவில் சன் தொலைக்காட்சியில் புதிதாக அவள் ஒரு தேவதை எனும் சீரியல் ஆரம்பமாக இருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடிகை நிமேஷிகா தான் கமிட்டாகியுள்ளாராம். விரைவில் இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகும் என்கின்றனர்.

மேலும் இந்த சீரியலில் சின்னத்திரை நடிகர்களான கார்த்திக் மற்றும் சல்மான் ஆகியோரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என கூறப்படுகிறது. இந்த சீரியல் மட்டுமின்றி தோழி எனும் புதிய சீரியலும் சன் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.