கைது செய்யப்பட்ட பட்டதாரிகள் விடுதலை!

வடமத்திய மாகாண சபைக் கட்டடத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 22 வேலையற்ற பட்டதாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வேலையற்ற பட்டதாரிகள் குழு ஒன்று வடமத்திய மாகாண சபை கட்டிடத்தை முற்றுகையிட்டு இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து 22 மாணவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.