தந்தை வெளிநாட்டில் தாய் கண்டித்ததால் விபரீத முடிவெடுத்த மாணவி!

நீர்கொழும்பு பகுதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் தந்தை வசித்து வரும் நிலையில் மாணவி தாயாரின் அரவணைப்பில் நீர் கொழுப்பு பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், மாணவி அதிகநேரம் தொலைபேசி உரையாடுவதை தாயார் கண்டித்ததால் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (12-05-2024) மாலை உயிரை மாய்த்துள்ளார்.

நீர் கொழும்பு பகுதியில் வசித்து வரும் 16 வயதான மார்ட்டின் பிரியா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் சடலம் உடற்கூற்று சோதனைக்காக நீர்கொழும்பு வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக நீர் கொழுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.