யாழில் குழந்தையை பிரசவித்த சிறுமி பகீர் வாக்குமூலம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்த பின்னர் , சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான சிறுமியின் வாக்கு மூலத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

தாயின் நண்பர் என கூறப்படுபவராலேயே தான் கர்ப்பம் தரித்ததாகவும் சிறுமி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். சம்பவம் குறித்து சிறுமி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில்,

விளக்கமறியலில்
தனது தாயாருடன் பழக்கமானவர் என்றும், தாயாரிடம் வந்து தங்கியிருந்த சமயத்தில் அவருடன் எதார்த்தமாக பழகியதாகவும், தன்னுடனும் உறவு வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த பின்னர் சொப்பிங் பையில் குழந்தையை எடுத்ததாகவும், குழந்தை இறந்து விட்டதென தான் நினைத்ததாகவும், மறுநாள் காலையில் தாயார் தன்னை அழைத்து வந்துவிட்டதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.

சிறுமியிடமும், தாயாரிடமும் பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்தனர். சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞனின் நேற்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.