மோசடியில் ஈடுபட்ட முல்லைத்தீவு வலயக்கல்வி கணக்காளரின் திருவிளையாடல் அம்பலம்!

முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் கணக்காளர் ஒருவர் பல நிதி மோசடிகளை குறித்த கல்விவலையப் பணிப்பாளருடன் இணைந்து செய்வது அம்பலமாகியுள்ளது.

சுமார் 4 லட்சத்து 85ஆயிரம் ரூபா பெறுமதியான அரசாங்க நிதியை, முல்லைத்தீவு சம்பத்நுவர பாடசாலைக்கு கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் மாகாண கல்வி பணிப்பாளரால் ஒதுக்கப்பட்ட போதிலும் முல்லைத்தீவு வலய கல்வி பணிப்பாளர் அந்நிதியை பாடசாலைக்கு வழங்கவில்லை.

மேலும், கணக்காளரும், வலயக்கல்விப் பணிப்பாளரும் அரச பணத்தை ஊழியர்களுக்கு வட்டிக்கு கொடுப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.