கனடா செல்லவிருந்த இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழப்பு!

   கனடாவுக்கு செல்லவிருந்த யாழ்பாண இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணியளவில் சாவகச்சேரி – புத்தூர் விதியில் இடம் பெற்றுள்ளது.

மதிலுடன் மோதி விபத்து

சம்பவத்தில் சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்தபி – பனுஜன் வயது 22 என்ற இளைஞரே உயிரிழந்2துள்ளார்.

அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் மதிலுடன் மோதிய விபத்தில் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம்சாவகச்சேரிவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த இளைஞர் நாளைய தினம் (27)கனடாவுக்கு பயணமாக இருந்த நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.