அமெரிக்க விபத்தில் பலியான இந்திய பெண்!

அமெரிக்கா புளோரிடாவிலுள்ள அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற இந்திய பெண் சாலையை கடக்க முற்பட்ட போது கார் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகளில் வெளியாகியுள்ளன.

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தெலுங்கானாவின் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் யாதகரிபள்ளே கிராமத்தில் வசித்து வரும் தம்பதி கோடீசுவர ராவ் மற்றும் பாலாமணி. இவர்களுடைய மகள் 25 வயதுடைய குந்திப்பள்ளி சவுமியா இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவருடைய தந்தை முன்னாள் சி.ஆர்.பி.எப். படை வீரர் ஆவார்.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு படிப்பை தொடர சென்ற சவுமியா, படிப்பை முடிந்ததும், வேலை தேடி வந்திருக்கிறார்.

இந்நிலையில், கடந்த 26-திகதி மளிகை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு, இருப்பிடத்திற்கு திரும்பும்போது, சாலையை கடந்த அவரின் மீது விரைவாக வந்த கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.