பிரான்சில் இலங்கையருக்கு பத்து வருட சிறை தண்டனை!

பிரித்தானியாவுக்கு இலங்கையர்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை ஏதிலி ஒருவருக்கு பிரான்ஸில் (France) பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2001இல் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் இங்கிலாந்துக்கு சென்றபின் சதாசிவம் சிவகங்கனுக்கு (Sathasivam Sivagankan) புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், இலங்கையில் மோதல்கள் இடம்பெற்ற 2004 முதல் 2005 வரை இலங்கைக்கு திரும்பியதாக குறிப்பிட்டுள்ளது.

இங்கிலாந்து நீதிமன்ற தீர்ப்பு

இந்தநிலையில் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்திற்கு இலங்கையர்களை கடத்தும் சர்வதேச குழுவின் முன்னணி உறுப்பினராக சிவகங்கன் இருப்பதாக பிரான்ஸின் சட்டத்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ருமேனியா, இத்தாலி, ஜெர்மனி, ஹங்கேரி, உக்ரைன், ஸ்லோவேனியா மற்றும் ஒஸ்திரியாவிலிருந்து கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் வளர்ச்சியில் பிரான்சுக்கும் இலங்கையர்கள் கடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டால் சிவகங்கன் பத்து ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும்.

இந்நிலையில் இங்கிலாந்தின் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அவர் விரைவில் பிரான்ஸிற்கு நாடு கடத்தப்படவுள்ளார். அதுவரை அவரை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.