மாடியில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு!

வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹொரண அரமனாகொல்ல கந்தன்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாதுகாப்பு வேலி இல்லாத வீட்டின் மேல் மாடியில் இருந்தே குறித்த நபர் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.