யாழில் டிப்பர் மோதியதில் பலியான இளம் குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணத்தில் (jaffna) டிப்பர் வாகனம் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து யாழ். சாவகச்சேரி (Chavakachcheri), கைதடி – நுணாவில் பகுதியில் இன்று (12.6.2024) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மேலதிக விசாரணை

யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம், வீதியில் நடந்து சென்ற குடும்பஸ்தரை மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

குருநாகலைச் சேர்ந்த 34 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி (Chavakachcheri)காவல்துறையினர்  மேற்கொண்டு வருகின்றனர்