யாழில் விபரீத முடிவால் உயிரிழந்த இளம் தாய்!

யாழ்ப்பாண பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (13-06-2024) காலை 10:00 மணியளவில் நெல்லியடி கிழக்கு முடக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் மூத்த மகனுக்கு 9 வயதுஅடுத்தவருடம்புலமைப்பரீட்டைக்கு தோற்றவுள்ளார்.

இரண்டாவது மகளுக்கு 7 வயது 2 ஆம் தரத்தில் கல்வி கற்று வருகின்றார்.

சம்பவத்தில் 35 வயதான குணசீலன் ஆனந்தி என்ற இளம் தாயை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.