பெற்றோர் உயிரிழந்ததை தொடர்ந்து ஒரே மகளும் உயிரிழந்த சோகம்!

யாழ்ப்பாணம் – நயினாதீவில் தந்தை தாய் உயிரிழந்த நிலையில் ஒரே மகளும் நேற்றைய தினம் (16) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் நயினாதீவு 05 ம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசசூரியர் பவதாரணி வயது 22 என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் தந்தை மற்று தாய் சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் அம்மம்மாவுடன் வாழ்ந்து வந்த இளம் பெண் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்துள்ளார்.