யாழ்ப்பாணத்தில் வீட்டை எரித்துக் கொள்ளை!

வீடு ஒன்று எரியூட்டப்பட்டு அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த வன்முறை சம்பவம் யாழ்ப்பாணம் (jaffna) – புங்குடுதீவு பத்தாம் வட்டாரப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் நேற்று (10.07.2024) இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பொதுமக்கள் கோரிக்கை

இதன்போது, புங்குடுதீவு பதினொராம் வட்டாரத்தை சேர்ந்த மயூரன் எனும் நபரும் வல்லன் பகுதியை சேர்ந்த ஆட்காட்டி என்றழைக்கப்படுகின்ற ராசலிங்கம் என்பவருமே ஊர்காவற்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரு நபர்களும் புங்குடுதீவில் தொடர்ச்சியாக பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு  வருகிறவர்கள் என தெரியவந்துள்ளது.

ஆட்காட்டி என்றழைக்கப்படுகின்ற ராசலிங்கம் என்பவர் பதிவுகள் ஏதுமின்றி கிராமத்தில் வாழ்ந்துவருவதாகவும் இதுதொடர்பாக வேலணை பிரதேச செயலக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்றும் பொதுமக்கள் கோரியுள்ளனர்.