யாழ்.பருத்தித்துறை சந்தை வியாபாரிகள் 3 பேர் உட்பட 5 பேருக்கு கொரோனா

யாழ்.பருத்தித்துறை பொதுச்சந்தை வியாபாரிகள் 3 பேர் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

மேற்படி பகுதியில் எழுமாற்றாக இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே ஐவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் மூவர் சந்தை வியாபாரிகள் என்றும் இருவர் சந்தை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பருத்தித்துறை சந்தையை தற்காலிகமாக மூடுவதா அல்லது கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதிப்பதா என்பது தொடர்பில்

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.