பளை A-9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி!

A-9 வீதியில் பளை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முச்சக்கரவண்டியும் கனரக வாகனமும் விபத்துக்குள்ளாகியுள்ளது.இதில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர் விபத்துக்குள்ளான நிலையில்

பளை ஆதார மருத்துவமனை எடுத்துசெல்லப்பட்ட போது அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.