யாழ்.பல்கலைகழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம்!

கொத்தலாவல சட்டமூலத்தை எதிர்த்து இன்று காலை 11 மணியளவில் யாழ்.பல்கலைகழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று புதன்கிழமை (28) இணையவழிக் கற்பிப்பித்தலில் இருந்து விலக முடிவு செய்வதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அதற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.