யாழில் 5 கோடி பெறுமதியான போதைப் பொருட்களுடன் மூவர் கைது

5 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வந்த மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் பொலிகண்டி பகுதியில் வைத்து இன்று (14) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது 2 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான 2 கிலோ 200 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 2 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான 120 கிலோ கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்;;பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினர் மேற்;கொள்ளப்பட்ட வழமையான ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் மாங்குளம், இரணைமடு மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த 38, 34 மற்றும் 28 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.