யாழில் இன்று அதிகாலை போதைப் பொருளுடன் கைதான 3 பேரில் ஒருவருக்கு கொரோனா!

யாழ்.பொலிகண்டி பகுதியில் இன்று அதிகாலை பெருமளவு போதைப் பொருளுடன் கடற்படையினால் 3 போரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொலிகண்டி பகுதியில் இன்று அதிகாலை கடற்படை ரோந்து நடவடிக்கையின்போது சுமார் 4 கோடிக்கும் அதிகமான பெறுமதி உடைய போதைப்பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.