40 வயதுடைய வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான பெண் ஒருவரை வன்புணர்வு செய்ய முயற்சித்த முச்சக்கர வண்டியின் சாரதியை எல்ல பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
எல்ல நகரிலிருந்து கரந்தகொல்ல இரவு விடுதிக்கு சென்று கொண்டிருந்த அமெரிக்கப் பெண் ஒருவர் ஓட்டோவில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டோ சாரதி ஒருவர் ஆளில்லாத பகுதியில் முச்சக்கரவண்டியை நிறுத்தி வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதியிமிருந்து தப்பிய அமெரிக்கப் பெண், எல்ல பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, தனது நிலை குறித்து முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டையடுத்து அப்பகுதிக்கு விரைந்த எல்ல பொலிஸார் முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியிடம் விசாரணை நடத்தியதன் பின்னர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுப்பதாக எல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபேந்திர வாசனா அபேகுணவர்தன தெரிவித்தார்.